ஐந்து கிலோ சிலிண்டர் விற்பனை சீராகத் தொடர்வதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஐந்து கிலோ சிலிண்டர் விற்பனை சீராகத் தொடர்வதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. நாளையதினம் (26) நடைபெறவிருந்த குறித்த பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் போட்டிப்பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். பரீட்சை நடைபெறும் புதிய திகதி அத்துடன் பரீட்சை நடைபெறும் ப... இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Gold prices, which had been fluctuating over the past few days, declined slightly yesterday. With the price in Chennai dropping by Rs. 480 per sovereign yesterday to stand at Rs. 1,12,800, there is now anticipation regarding whether gold prices will rise or fall today. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை விநியோகிப்பதில் முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED), இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வரும் ஒரு 'பொது அதிகாரம்' (Public Authority) கொண்ட அமைப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கின் பின்னணி: விவசாயி பி.ஜோதிபாசு என்பவர், கடந்த 2021-ஆம் ஆண்டு டான்ஃபெட் மூலம் விநியோகிக்கப்பட்ட உரங்கள் தரம் குறைந்ததாக இருந்ததாகவும், அவை 'கரையாமல் சேறு போல இருந்ததாகவும்' குற்றம் சாட்டினார். இது தொடர்பாக உரக் கொள்முதல், டெண்டர் நடைமுறைகள் மற்றும் தரப் பரிசோதனை விவரங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால், டான்ஃபெட் ஒரு தன்னாட்சி பெற்ற கூட்டுறவு அமைப்பு என்றும், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாநில தகவல் ஆணையமும் டான்ஃபெட்டிற்கு சாதகமாகவே அப்போது தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வி. லக்ஷ்மிநாராயணன், மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்தார். நீதிபதி தனது தீர்ப்பில், ‘டான்ஃபெட் என்பது மாநில அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு முக்கிய அங்கமாகவும், தேசிய விவசாயத் திட்டங்களுக்கான ‘நோடல் ஏஜென்சியாகவும்’ செயல்படுகிறது. அதன் தணிக்கை அறிக்கைகள் (Audit Reports) மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, இது பொதுமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை கொண்ட ஒரு பொது அதிகாரம் (Public Authority) ஆகும். ஏற்கனவே 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, டான்ஃபெட் அமைப்பில் தகவல் அலுவலர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் டான்ஃபெட் ஒரு பொது அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை அரசே ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது. டான்ஃபெட் ஒரு சாதாரண கூட்டுறவு சங்கம் அல்ல, அது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உச்சகட்ட அமைப்பு (Apex Body) என்று” நீதிபதி தெரிவித்தார். மேலும், விவசாயி ஜோதிபாசு கேட்ட அனைத்து விவரங்களையும் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று டான்ஃபெட் பொதுத் தகவல் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.