நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!
🎬 சினிமா

ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

சனி, ஏப்ரல் ௪, ௨௦௨௬|22 மணி நேரம் முன்|என்.நாகராஜன்|Abp News
ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் ரயில்வே கேட் அருகில் ஓடும் சக்கரை பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி வெகு மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான துவக்க விழா கடந்த மார்ச் மாதம் முதல்வாரத்தில் தொடங்கப்பட்டது. 1315 கிலோமீட்டர் தூரத்திற்கு மொத்தம் 299 பணிகள் ரூ.26.16 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதி வரை தண்ணீர் தடையின்றி சென்று சேர வேண்டும் என்பதற்காக தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட் அருகில் ஓடும் சக்கரை பாசன வாய்க்கால் தலைப்பிலிருந்து தூர் வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தூர் வாரும் மண்ணை கரையிலேயே கொட்டு கரையை வலுப்படுத்தி வருகின்றனர். பொக்லைன் இயந்திரத்தை கொண்டு அள்ளப்படும் மண்ணை சக்கரை பாசன வாய்க்கால் இருகரைகளிலும் கொட்டி இயந்திரத்தால் அழுத்தப்படுகிறது. இதனால் கரை வலுவாகிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் விரைவாக செல்லும் வகையில் தூர் வாரப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறுகையில், வரும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என்று போர்க்கால அடிப்படையில் விரைந்து நடந்து வருகிறது. விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தரமாக நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மேட்டூர் அணையில் வழக்கம் போல் தண்ணீர் திறந்தால் அடுத்த சில நாட்களிலேயே கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் இந்த தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் தூர்வாரப்படும் மண் பாசன வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதனால் கரையும் வலுவாகிறது. இந்த பணிகள் மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைமடை விவசாயிகளும் தடையின்றி தண்ணீரை பெற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவுப்படுத்தியதற்காக பாராட்டும், நன்றியும் அனைத்து விவசாயிகள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” படம் - விடிவி கணேஷ், அருள் தாஸ், நந்தகோபால் கதாபாத்திரங்கள் அறிமுகம்
சினிமா

அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” படம் - விடிவி கணேஷ், அருள் தாஸ், நந்தகோபால் கதாபாத்திரங்கள் அறிமுகம்

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
Sundar C | குஷ்புவிடம் எத்தனை கிலோ தங்கம்..? சுந்தர்.சி சொத்துமதிப்பு என்ன? - வேட்புமனு தகவல்!
சினிமா

Sundar C | குஷ்புவிடம் எத்தனை கிலோ தங்கம்..? சுந்தர்.சி சொத்துமதிப்பு என்ன? - வேட்புமனு தகவல்!

சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
சினிமா

TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேரதல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாளே கடைசி: இந்த சூழலில், தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை மறுநாளே கடைசி நாள் ஆகும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் என முக்கிய தலைவர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும், அந்தந்த கட்சி நிர்வாகிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாளுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவாக உள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7ம் தேதி நடைபெறும். இறுதிவேட்பாளர்கள் பட்டியல்: வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் வரும் 9ம் தேதி ஆகும். இந்த தேதிக்குள் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள். அதன்பின்னர், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். இந்த தேர்தலில் முதன்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கும் தவெக மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், சீமான் காரைக்குடியிலும், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகள் மட்டுமின்றி அமைச்சர்கள், பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளும் மிகவும் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடக்கிறது. அனல் பறக்கும் தேர்தல்: தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால் தினசரி ஒவ்வொரு தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், சீமான், விஜய் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு தினமும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அரசியல் களம் அனல்பறந்து வருகிறது. வேட்பாளர்கள் விசித்திரமாக வாக்கு சேகரிப்பதும், பரப்புரையில் ஈடுபடுவதும் அரங்கேறி வருகிறது. பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்கு பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்