திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதி ஓட்டு ணெ்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தேர்தல்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதி ஓட்டு ணெ்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தேர்தல்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், அனல் பறக்க நடந்து வந்த தேர்தல் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

திருப்பூர்: சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மாலையுடன் நிறைவடைந்தது; மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளுக்கு இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வி – கண்ணதாசன் கூட்டணி இணைந்தாலே அந்த பாடல் பெரிய ஹிட்டடித்து காலம் கடந்து பேசப்படும். இவர்கள் இருவரும் பாடல்களை உருவாக்கும்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. இதை எம்.எஸ்.வி. பல பேட்டிகளில் அந்த வகையில் ஒரு பாட்டுக்கு 400 டியூன் போட்ட தகவல் பலரும் அறிந்திடாத ஒரு தகவல். தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1963-ம் ஆண்டு வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. கல்யாண் குமார், நம்பியார், நாகேஷ், தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், ஸ்ரீதர் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கிறது. இன்றைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற ஒரு பாடலுக்காக. எம்எஸ்.வி 300-400 டியூன்கள் போட்டும் நிராகரிக்கப்பட்டு இறுதியாக ஒரு டியூன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பாடல் இன்றைக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இது குறித்து எம்.எஸ்.வி அளித்த பழைய பேட்டி ஒன்றில், “இயக்குநர் ஸ்ரீதர் என்னிடம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என டைட்டில் வைத்திருக்கிறேன். இந்தப் பாடல் மற்ற பாடல்களை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னார். நெஞ்சம் மறப்பதில்லை என்ற அந்தப் பாடலை கண்டிப்பாக யாரும் மறக்க கூடாது. அப்படி ஒரு பாட்டு வேண்டும் என்று அவர் சொல்ல, நாங்கள் கம்போசிங்கில் அமர்ந்தோம். ஒரு பாடல் உருவாக்க 2-3 மாதங்கள் கடுமையாக வேலை செய்தோம். 300- 400 டியூன் போட்டோம். ஆனால் ஒரு டியூன் கூட தேர்வாகவில்லை. எனக்கு பிடித்தது, கண்ணதாசனுக்கு பிடிக்காது, அவருக்கு பிடித்தால் இயக்குநர் ஸ்ரீதருக்கு பிடிக்காது. எங்கள் 3 பேருக்கும் ஒரு டியூன் பிடிக்க நீண்ட நாட்கள் ஆனாது. இந்த அளவுக்கு டைம் எடுத்துக்கொண்டு உருவாக்கிய அந்த பாடலை நினைத்தால், வேதனையாக சாதனையாக மாறியது தான் ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடல் என்றும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார். அந்தப் பாடல் தான் பி.சுசீலா குரலில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை” என்ற பாடல். இந்தப் பாடல் 4 வெர்ஷன்களாக படத்தில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.