மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடந்த சிறிய வாகன மோதல், எதிர்பாராத விதமாக பெரும் பதற்றமாக மாறியுள்ளது. ஒரு குடும்பம் பயணித்த காரை வழிமறித்து மிரட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் இருந்தும் அச்சுறுத்தல் நடத்தியது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சிறிய மோதல்... பெரிய ஆவேசம் தகவலின்படி, சாலையில் இரண்டு வாகனங்கள் லேசாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒருவர், கையில் தடியுடன் அந்த குடும்பத்தின் காரை தடுத்து நிறுத்தினார். பின்னர், காரின் கண்ணாடியை உடைப்பதுபோல் சைகை செய்து தொடர்ந்து மிரட்டியுள்ளார். காரில் பெண்களும் சிறு குழந்தைகளும் இருந்தபோதும், அவரது நடத்தை மாறவில்லை. குழந்தைகள் பயப்படுவதாக தந்தையின் வேண்டுகோள் அந்த குடும்பத்தின் தந்தை, “காரில் குழந்தைகள் இருக்கிறார்கள், பயப்படுகிறார்கள்” என்று பலமுறை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆவேசத்தில் இருந்த அந்த நபர் எதையும் கவனிக்கவில்லை. இந்த road rage சம்பவம் அருகில் இருந்தவர்களையும் பதறவைத்துள்ளது. இதையும் படிங்க: திருமண வீட்டில் மாப்பிள்ளையிடம் விளையாட்டாக நண்பர்கள் செய்த விஷயம் வினையாக முடிந்தது! பதைப்பதைக்க வைக்கும் வீடியோ..!!! வைரல் வீடியோக்கு பிறகு போலீஸ் நடவடிக்கை இந்த viral video இணையத்தில் பரவியதையடுத்து, நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிறிய விபத்துகளுக்கே சட்டப்படி தீர்வு இருக்கும்போது, இவ்வாறான அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். INDORE 📍 कार में बच्चे हे छोड़ दीजिए गुहार लगाते रहे माता पिता मगर दबंग ने एक नहीं सुनी दबंग मारने पर था उतारू अपराध छोटी सी वाहन की टक्कर अगर टक्कर लगी तो मुआवजा होना चाहिए....कानूनी रास्ते होना चाहिए क्या हिंसा करना धमकी देना सही है या गलत आप बताइए 🫵 pic.twitter.com/RTTdkTzCzA — KUNDAN PATEL (@KUNDAN00PATEL) April 26, 2026 இதையும் படிங்க: குடிபோதையில் கார் மேல் ஏறி தலைக்கால் புரியாமல் ஆட்டம் போட்ட பெண்! அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சியை பாருங்க! வைரல் வீடியோ!!!
இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



