நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >புதுச்சேரியில் நாளை ஜனநாயகத் திருவிழா: 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
🎬 சினிமா

புதுச்சேரியில் நாளை ஜனநாயகத் திருவிழா: 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|சிவரஞ்சித்|Abp News
புதுச்சேரியில் நாளை ஜனநாயகத் திருவிழா: 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் முடித்துள்ளது. புதுச்சேரி மாநில சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 9) நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள 30 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் களம்: 294 வேட்பாளர்கள் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகள், காரைக்காலில் 5, மாஹே மற்றும் ஏனாமில் தலா ஒன்று என மொத்தம் 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய கட்சிகள் சார்பில் 34 பேர், மாநில கட்சிகள் சார்பில் 63 பேர், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் 80 பேர் மற்றும் 117 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குச்சாவடிகளுக்குப் புறப்பட்ட எந்திரங்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த தாகூர் கலைக்கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் மற்றும் மகளிர் பொறியியல் கல்லூரி மையங்களில் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் 'சீல்' அகற்றப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, இன்று மதியம் 12 மணி முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எந்திரங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ஜிபிஎஸ் (GPS) மூலம் கண்காணிக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் விவரம் பயன்பாட்டில் உள்ளவை: 1,099 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,099 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1,099 விவிபாட் (VVPAT). கூடுதல் கையிருப்பு: அவசரத் தேவைகளுக்காக 364 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 459 விவிபாட் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,099 வாக்குச்சாவடிகளிலும் மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் மாநில போலீசார் எனப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் இணைக்கப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படும். வாக்காளர் விவரம் இந்தத் தேர்தலில் மொத்தம் 9,50,311 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில்: பெண் வாக்காளர்கள்: 5.03 லட்சம் ஆண் வாக்காளர்கள்: 4.4 லட்சம் வாக்கு எண்ணும் மையம்: மே 4-இல் முடிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பின்னர், எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு வரப்பட்டு காப்பு அறைகளில் (Strong Rooms) வைக்கப்படும். இந்த அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்
சினிமா

LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'LIK'| The film titled “LIK”, directed by Vignesh Shivan and starring Pradeep Ranganathan and Krithi Shetty, is set to be released இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் கடும் பாதிப்பு! – தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை
சினிமா

வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் கடும் பாதிப்பு! – தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், மாதவரம் பால் பண்ணையில் நிலவும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் இந்தச் செய்தி Chennaionline ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
பிரச்சாரத்தில் சட்டென கண்ணீர் மல்கிய அதிமுக வேட்பாளர்.. நெகிழ்ந்த கோவை கிராமம்
சினிமா

பிரச்சாரத்தில் சட்டென கண்ணீர் மல்கிய அதிமுக வேட்பாளர்.. நெகிழ்ந்த கோவை கிராமம்

Coimbatore: In Coimbatore, an incident occurred in which AIADMK MLA and Sulur constituency candidate Kandasamy broke down in tears while campaigning in his hometown. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்