சினிமாடி.எம்.எஸ் மார்க்கெட்டை காலி செய்த டி.ஆர்; இந்த ஒரு பாட்டு தான் அவர் வீழ்ச்சிக்கு காரணமா?
எம்.ஜி.ஆர் சிவாஜி காலம் முதல் பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தனக்கு வாய்ப்பு பறிபோனதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதேபோல் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்துள்ள, டி.எம்.சௌந்திரரஜன், எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ் என 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். பல வெற்றிகள் கொடுத்திருந்தாலும், தனது மார்க்கெட் போனதற்கு முக்கிய காரணமாக ஒரு படத்தையும் அந்த படத்தின் இயக்குனரயும் கூறியுள்ளார் டி.எம்.எஸ். அவர் யார் தெரியுமா? பன்முறை திறமையானர் டி.ஆர் தான். 1980-ம் ஆண்டு தமிழில் வெளியான படம் ஒரு தலை ராகம். டி.ராஜேந்தர் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தில், சங்கர், தியாகு, சந்திரசேகர், உஷா ராஜேந்தர் உள்ளிட்டர் பலர் நடித்திருந்தனர். காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாடல்களும், சிறப்பான வரவேற்பை பெற்று பாராட்டுக்களையும் பெற்றது.இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய, டி.ராஜேந்தர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். இதில் வரும் அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரம் ஆகிய இரு பாடல்களும், இன்றும் ஒரு சிறப்பான பாடல் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த இரு பாடல்களையும் டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், நான் ஒரு ரசியில்லா ராஜானு முதல் பாடல், என் பேர் சௌந்திரராஜன், நானே ராசியில்லா ராஜானு என் வாயால எப்படியா பாட முடியும் என்று நான் டி.ராஜேந்தரிடம் சொன்னேன். சார் இந்த பாடலை படத்தில் கதாநாயகன் பாடுகிறார் சார் என்று என்னை சமாதானப்படுத்தி பாட வைத்தார் அடுத்த பாட்டுதான் பெரிய திருப்பம். என் கதை முடியும் நேரம் என்று நானே பாடினேன். இந்த பாடல்களை பாடியதால் தான் என் மார்க்கெட் போய்விட்டது என்று சொல்ல மாட்டேன். அதன்பிறகு வந்த புதுப்பாடல்களால் தான் சௌந்தர்ராஜன பாடிய பாட்டோட அருமை தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்த பாட்டு பாடியதால் என் மார்க்கெட் போனது என்றும் சொல்லிவிட முடியாது. இன்றைக்கு வரும் புது பாடல்கள் தான் என் பாடல்களை அடையாளம் காணும் அளவுக்கு இருக்க செய்கிறது என்று டி.எம்.எஸ். கூறியுள்ளார். பல மொழிகளில் பாடியிருந்தாலும் டி.எம்.எஸ் கடைசியாக ஏ.ஆர்,ரஹ்மான் இசையில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலை பாடியிருந்தார்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.