தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 21-ந் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வர உள்ளது. பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் ரத்து தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட அனுமதி கேட்டிருந்தார், இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுவிட்ட நிலையிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரம் பலமுறை இதேபோல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, உதயநிதிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்பதற்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓட்டு தமிழ்நாட்டுக்கான அல்ல. இந்தியாவுக்காக, தமிழ்நாடே தனி கோட்டையாக இந்தியாவுக்கான போராடிக்கொண்டு இருக்கிறது. அதில் முன்னணியில் நிற்கும் வீரர் உதயநிதி ஸ்டாலின் என்று பேசியுள்ளார். பெண்கள் எதிர்கட்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் - அமித்ஷா தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை. இந்த மசோதா தோற்றுப் போய்விடும் என்றும் எனக்கு தெரிகிறது ஆனால், இந்த நாட்டுப் பெண்கள் எதிர்க்கட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை என ஆவேசமாக கூறியுள்ளார்.
TN Assembly Election Live Updates: தமிழக சட்டசபை தேர்தல் - ராகுல்காந்தி பிரச்சாரம்



