தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிள் நாளை பிரச்சாரம் மற்றும் ரோட் ஷோ செய்ய உள்ளதாக தவெக அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரிரு நாளே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் தவெக 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே காரைக்குடி, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வெலி, கன்னியாக்குமரி, சென்னை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே பரப்புரை மேற்க்கொண்டார். திருச்சியில் மீண்டும் விஜய்: தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில்ஒன்றான திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்த அன்றைய தினமே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். இந்த நிலையில் திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்க்கொள்ளவுள்ளார். இதற்காக தவெக சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு, வயர்லஸ் ரோடு, தென்றல் நகர், கே.கே.நகர், காஜாமலை ரோடு, EVR காலேஜ், SRM ஹோட்டல், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு வழியாக மாலை 3 மணி முதல் வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை பின் தொடரக்கூடாது: பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் விஜயின் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



