அரசியல்Tamil Nadu Election 2026: "வெயிலுக்குப் பயந்து வாக்களிக்காமல் இருக்காதீங்க!" – நாளை எந்த நேரத்தில் ஓட்டுப் போடுவது பெஸ்ட்?
தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், வாக்குப்பதிவு நாளான நாளை எந்த நேரத்தில் வாக்களிக்க போக வேண்டும் என்பதை முன்பே திட்டமிட்டு கொள்ளுங்கள். இதனால், வெப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நாளான நாளை தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். தங்களின் கடமையான வாக்குரிமையை செலுத்த மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தங்களின் ஒரு ஓட்டுக்காக செல்லும் மக்கள், வாக்களிக்கும் போது உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களும், இருக்கும் மக்களும் அதிகமாக வெயில் அடிக்கும் நேரத்தில் செல்லாமல் அதற்கேற்றார்போல், திட்டமிட்டு சென்றுவிடுங்கள். முக்கியமாக 50 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், உடலில் பிற உபாதைகள் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். நீங்கள் எந்த நேரத்தில் வாக்களிக்க செல்வீர்கள்? வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், நீங்க எந்த நேரத்தில் வாக்களிக்க செல்கிறீர்கள் என்பதை திட்டமிட்டு கொள்ளுங்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 7 மணி முதல் 10 மணிக்குள் வாக்களிக்க செல்லுங்கள் அல்லது மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் செல்லுங்கள். இந்த இடைபட்ட நேரத்தில் வெயில் உக்கிரமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தை முடிந்த அளவுக்கு தவிர்த்துவிடுங்கள். ஆனால், கூட்டம் இந்த நேரத்தில் குறைவாக இருக்கும் என்பதால், சிலர் அந்த நேரத்தில் செல்வார்கள். அப்போது, அதற்கேற்றார்போல் முன்னெரிச்சரிக்கையுடன் செல்லுங்கள். வாக்களிக்க செல்லும்போது மறக்காமல் இதையெல்லாம் கொண்டு செல்லுங்கள்: * தண்ணீர் பாட்டில் * குடை * கேப் * ஜூஸ் மாலை 6 மணிக்கு வாக்களிக்க செல்வோர் கவனத்திற்கு கடைசி நேரத்தில் வாக்களிக்க செல்பவர்களுக்கு, அதாவது 6 மணிக்குள் செல்பவர்களுக்கு டோக்கன் வழங்குவார்கள். அதை வைத்துக்கொண்டு வாக்களிக்கலாம் நாளை வெயில் எப்படி இருக்கும்? சென்னை வானிலை மையம் அறிக்கை 22-04-2026 மற்றும் 23-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 24-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25-04-2026 முதல் 28-04-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 22-04-2026 முதல் 26-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். 22-04-2026 முதல் 26-04-2025 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். 22-04-2026 முதல் 26-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (22-04-2026) மற்றும் நாளை (25-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-20* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.