விளையாட்டுவீடியோ; பெல்ஜியம் ரேஸில் வெற்றி; பதக்க மேடையில் இந்திய தேசிய கொடியை அசைத்து அஜித் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் குமார், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் கார் ரேஸ் போட்டிகளில் கலச்துகொண்டு வரும் நிலையில், தற்போது அவர் தனது கார் ரேஸ் குழுவுடுன் இந்திய தேசிய கொடியை உயர்த்தி பிடித்துள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பெல்ஜியத்தில் உள்ள புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் (Circuit de Spa-Francorchamps) ஓடுதளத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில், நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது பந்தய குழுவினர் மீண்டும் ஒருமுறை பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர். 24H சீரிஸ் (24H Series) தொடரில் அஜித் குழு இரண்டாம் இடத்தைப் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. விருது மேடையில் அஜித் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துத் தனது குழுவினருடன் வெற்றியைக் கொண்டாடினார். அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் குமார் ரேசிங் டீமின் இந்த மகுடம் சூடும் தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவிற்கு, "பெருமைக்குரிய மேடையில்... சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் ஓடுதளத்தில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர். 24H சீரிஸில் P2 (இரண்டாம் இடம்) வெற்றி - ஆர்வம் பெருமிதமாக மாறும் தருணம், உலக அரங்கில் இந்தியக் கொடி உயர்ந்து பறக்கிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், அஜித் குமார் ரேசிங் டீமின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் வெற்றிக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. அதில் குழுவினர் கோப்பையை ஏந்தியபடியும், சாம்பெய்ன் தெளித்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதைக் காண முடிகிறது. நடிகர் அஜித் குமார் கடைசியாக 2025-ல் வெளியான 'குட் பேட் அக்லி' (GBU) திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தனது 2-வது படத்தை பிப்ரவரி மாதம் தொடங்க வேண்டியிருந்தது. ஆனால், அஜித்தின் ரேசிங் போட்டிகள் காரணமாக அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான அவரது பந்தய அட்டவணைப்படி, அவர் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார். View this post on Instagram A post shared by Suresh Chandra (@sureshchandraaoffl) அவர் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை எப்போது தொடங்குவார் என்பதில் இன்னும் தெளிவில்லை. மேலும், அந்தப் படத்திற்காக அவர் ஒரு தயாரிப்பாளரைத் தேடி வருவதாகத் தகவல்கள் உலா வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.