நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >இனி சிலிண்டர் கவலை வேண்டாம்? காய்ந்த இலைகளில் இருந்து சமையல் எரிவாயு கண்டுபிடிப்பு!
💻 தொழில்நுட்பம்

இனி சிலிண்டர் கவலை வேண்டாம்? காய்ந்த இலைகளில் இருந்து சமையல் எரிவாயு கண்டுபிடிப்பு!

புதன், ஏப்ரல் ௧, ௨௦௨௬|23 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
இனி சிலிண்டர் கவலை வேண்டாம்? காய்ந்த இலைகளில் இருந்து சமையல் எரிவாயு கண்டுபிடிப்பு!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு மைல்கல்லாக, ஐ.ஐ.டி பம்பாய் விஞ்ஞானிகள் காய்ந்த இலைகளைப் பயன்படுத்தி சமையல் எரிபொருளைத் தயாரிக்கும் புதிய வழியை கண்டறிந்துள்ளனர். வெறும் குப்பையாகக் கருதப்பட்ட இலைகள் இனி சமையலறைகளை ஒளிரச் செய்வதுடன், இந்தியாவின் எல்.பி.ஜி தேவையையும் குறைக்க உதவப்போகிறது. ஐ.ஐ.டி பம்பாய் விஞ்ஞானிகள், காய்ந்த இலைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை சமையல் எரிபொருளாக மாற்றும் 'பயோமாஸ் காசிஃபிகேஷன்' (Biomass Gasification) என்ற காப்புரிமை பெற்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் சஞ்சய் எம். மஹாஜனி தலைமையில் 2014-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வளாகத்தில் உள்ள அன்றாடக் குப்பைகளை நம்பகமான, சுத்தமான எரிசக்தி ஆதாரமாக மாற்றுவதில் கவனம் செலுத்தியது. இது எப்படிச் செயல்படுகிறது? இத்தொழில்நுட்பத்தின் மையப்பகுதியே 'பயோமாஸ் காசிஃபிகேஷன்' முறைதான். முதலில் காய்ந்த இலை சேகரிக்கப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, சிறிய உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. இந்த உருண்டை குறைந்த ஆக்ஸிஜன் கொண்ட அறையில் சூடாக்கப்படுகின்றன. அங்கு அவை 'பைரோலிசிஸ்' (Pyrolysis), 'கேசிஃபிகேஷன்' செயல்முறைகளுக்கு உட்பட்டு, எரிபொருள் நிறைந்த வாயு கலவையை வெளியிடுகின்றன. இந்த வாயு எரியும்போது சுத்தமான சுடரை உருவாக்குகிறது, இது சமையலுக்கு ஏற்றது. #WATCH | Mumbai, Maharashtra: The Indian Institute of Technology (IIT) Bombay has developed an indigenous technology to combat the rising prices and potential shortages of LPG (cooking gas). Through its patented biomass gasification technology, the institute has successfully... pic.twitter.com/rVVIFDrKGV — ANI (@ANI) March 31, 2026 பொதுவாக இந்திய பயோமாஸில் சாம்பல் சத்து அதிகமாக இருப்பதால் 'கிளிங்கர்' (Clinker) எனப்படும் கட்டிகள் உருவாகும் சிக்கல் ஏற்படும். இந்த வடிவமைப்பில் அந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு அமைப்பு சுமார் 3.67 MJ/kg வெப்ப மதிப்பைக் கொண்டுள்ளதுடன், நிஜ பயன்பாட்டில் 60% வெப்பத் திறனை (Thermal Efficiency) வழங்குகிறது. இந்தக் கண்டுபிடிப்பு 'கழிவிலிருந்து ஆற்றல்' எனும் அறிவியல் கோட்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நகரப்புறங்களில் கிடைக்கும் உயிரியல் கழிவுகளைத் தற்கால வெப்ப வேதியியல் செயல்முறைகள் மூலம் சுத்தமான ஆற்றலாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போதைக்கு எல்.பி.ஜி-க்கு முழுமையான மாற்றாக இல்லாவிட்டாலும், ஒரு நிலையான மாற்றாகத் திகழ்கிறது. காய்ந்த இலைகளிலிருந்து எரியக்கூடிய வாயுவைத் தயாரிப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி மீதான தேவையைக் குறைக்க முடியும். குறிப்பாக பெரிய விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் சமூகச் சமையலறைகளில் எரிபொருள் செலவைக் குறைக்க இது பெரிதும் உதவும். தற்போது இத்தொழில் நுட்பம் ஐ.ஐ.டி பம்பாயின் சிற்றுண்டிச்சாலைகளில் பயன்பாட்டில் உள்ளது. அங்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி அளவில் சுமார் 30% முதல் 40% வரை இது குறைத்துள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இதை பல்கலை., தொழிற்சாலை குடியிருப்புகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்த முடியும். உதிர்ந்த இலைகளிலிருந்து சமையலறைச் சுடர் வரை, ஒரு நிலையான எரிசக்தி எதிர்காலத்திற்கு ஐஐடி பம்பாய் வழிவகுத்துள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை!
தொழில்நுட்பம்

கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை!

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில், கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை. ஒருசில தங்கக் காசுகளுக்காக இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
Lava Bold N2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
தொழில்நுட்பம்

Lava Bold N2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா போல்ட் என்2 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

வெப்ப அலையில் இருந்து தப்பிக்க காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம்:வெப்ப அலையில் இருந்து, பொது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்