நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >கண்ணைக் கவரும் 'கலர்புல்' பூமி... விண்வெளியில் இருந்து படம்பிடித்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள்!
💻 தொழில்நுட்பம்

கண்ணைக் கவரும் 'கலர்புல்' பூமி... விண்வெளியில் இருந்து படம்பிடித்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள்!

சனி, ஏப்ரல் ௪, ௨௦௨௬|1 நாள் முன்|meenakshi sundaram s|The Indian Express
கண்ணைக் கவரும் 'கலர்புல்' பூமி... விண்வெளியில் இருந்து படம்பிடித்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள்!

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் லட்சியத் திட்டமான 'ஆர்டெமிஸ்' வரிசையில், ஆர்டெமிஸ்-2 விண்கலம் தற்போது வெற்றிகரமாக நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. சுமார் ரூ.8.64 லட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில், விண்வெளி வீரர்கள் எடுத்துள்ள பூமியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கனடா நாட்டு விண்வெளி வீரர் உட்பட மொத்தம் 4 வீரர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், முதலில் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி வந்து விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்தனர். அதன் பிறகு, 'டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்' (Translunar Injection) என்ற என்ஜின் எரிப்பு தொழில்நுட்பம் மூலம் நிலவின் பாதையை நோக்கிச் செலுத்தப்பட்டனர். இவர்கள் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க உள்ளனர். ஓரியன் (Orion) விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு தொலைவிலிருந்து மனிதர்களால் எடுக்கப்பட்ட முதல் பதிவுகளாகும். விண்கலத்தின் சூரிய மின்தகடு சிறகுகளில் (Solar array wings) பொருத்தப்பட்ட கேமரா, விண்வெளியின் அடர்ந்த இருளில் பூமி ஒரு மெல்லிய வெள்ளிப் பிறையைப் போல காட்சியளிப்பதைப் படம் பிடித்துள்ளது. விண்கலத்தின் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட உயர்-திறன் (High-resolution) புகைப்படத்தில், பசிபிக் பெருங்கடலின் அடர் நீல நிறமும், வெண்மையான மேகக்கூட்டங்களும் மிகத் துல்லியமாகத் தெரிகின்றன. பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான அழகை வீரர்கள் இவ்வாறு பதிவு செய்துள்ளனர். நிலவுக்குச் செல்லும் வீரர்கள் ஏன் பூமியைப் படம் பிடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு நாசா இரண்டு முக்கியக் காரணங்களைக் கூறுகிறது. விண்கலத்தில் உள்ள மேம்பட்ட இமேஜிங் கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்தல். விண்வெளி ஆழமான பகுதியில் இருந்து பெரிய அளவிலான தரவுக் கோப்புகளை (Data Files) பூமிக்கு வெற்றிகரமாக அனுப்புவதைச் சோதிப்பது, வருங்கால நிலவுத் தரையிறக்கத் திட்டங்களுக்கு மிகவும் அவசியமானது. 1968-ல் அப்பல்லோ 8 மிஷனில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற 'எர்த்ரைஸ்' (Earthrise) படத்துடன் இவை ஒப்பிடப்படுகின்றன. ஆனால், அன்றைய படங்கள் பிலிம் (Film) சுருள்களில் எடுக்கப்பட்டவை; இன்றைய ஆர்டெமிஸ்-2 குழுவினர் நவீன டிஜிட்டல் சென்சார்கள் மூலம் மிகத் துல்லியமான படங்களை எடுத்து, அதிவேக செயற்கைக்கோள் வசதியுடன் உடனுக்குடன் உலகுடன் பகிர்ந்து வருகின்றனர். ஓரியன் விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழையும் போது, விண்வெளி வீரர்கள் தங்கள் கேமராக்களை நிலவை நோக்கித் திருப்புவார்கள். ஏப்.6-ஆம் தேதி, நிலவைச் சுற்றி வரும்போது நிலவின் மறுபக்கத்தை (Far side) இவர்கள் மிக நெருக்கமாகப் படம் பிடிக்க உள்ளனர். இந்தப் படங்கள், பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் பள்ளங்கள் மற்றும் மலைத்தொடர்களை ஆராய உதவும். இது 2028-ல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ்-4 (மனிதர்கள் நிலவில் தரை இறங்கும் திட்டம்) மிஷனுக்கான முன்னோட்டமாக அமையும்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு
தொழில்நுட்பம்

சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு சத்தமில்லாமல் அதன் ரூ,195 யில் வரும் கிரிகெட் டேட்டா பேக் திட்டத்தை மாற்றியுள்ளது அதாவது இந்த திட்டத்தில் வரும் வேலிடிட்டியை நன்மையை குறைத்துள்ளது, இந்த திட்டமானது முன்பு அதிக வெளிடிடியாக 90 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது ஒரே அடியாக மிக மிக குறைவாக குறைத்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க. Survey ✅ Thank you for completing [...] இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

22 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

திடீர் கனமழையால் வெப்பம் தணிந்தது

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

23 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

'பணப்புழக்கம், சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை கட்டுப்படுத்துங்க' சிறப்பு தேர்தல் பார்வையாளர் பிரதாப் சிங் அறிவுரை

காஞ்சிபுரம்;பணப்புழக்கம், சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டும், என, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

23 மணி நேரம் முன்