நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >Lava Bold N2 Pro 4G நாளை இந்தியாவில் அறிமுகம்: கம்மி விலையில் வியக்க வைக்கும் அம்சங்கள்
💻 தொழில்நுட்பம்

Lava Bold N2 Pro 4G நாளை இந்தியாவில் அறிமுகம்: கம்மி விலையில் வியக்க வைக்கும் அம்சங்கள்

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|vijaya lakshmi|Zee News
Lava Bold N2 Pro 4G நாளை இந்தியாவில் அறிமுகம்: கம்மி விலையில் வியக்க வைக்கும் அம்சங்கள்

வரவிருக்கும் Lava ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களும், அதன் அறிமுகமாக தேதியும் வெளியிடப்பட்டுள்ளன. LAVA Bold N2 Pro 4G ஸ்மார்ட்போன், 6.67 அங்குல HD+ LCD திரையைக் கொண்டிருக்கும். LAVA Bold N2 Pro 4G போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் முதல் அதன் பிற சிறப்பம்சங்கள் வரை அனைத்தையும் இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Zee News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

மினி பஸ் கவிழ்ந்து விபத்து; மூதாட்டி பலி; 5 பேர் காயம்
தொழில்நுட்பம்

மினி பஸ் கவிழ்ந்து விபத்து; மூதாட்டி பலி; 5 பேர் காயம்

வேப்பூர்: வேப்பூர் அருகே தனியார் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி இறந்தார். 5 பேர் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
பசிபிக் கடலில் 6,200 மீ. ஆழத்தில் கருப்பு முட்டைகள்... உலகையே வியக்க வைத்த புதிய கண்டுபிடிப்பு!
தொழில்நுட்பம்

பசிபிக் கடலில் 6,200 மீ. ஆழத்தில் கருப்பு முட்டைகள்... உலகையே வியக்க வைத்த புதிய கண்டுபிடிப்பு!

பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில், இதுவரை அறியப்படாத விசித்திரமான 'கரும்பச்சை-கருப்பு' நிற முட்டைகளை கடல் உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியின் மிகவும் கடினமான சூழலிலும் உயிர்கள் வாழ முடியும் என்பதற்கு இந்த தேடல் ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளது. வடமேற்கு பசிபிக் பகுதியில் உள்ள குரில்-கம்சட்கா அகழியில் (Kuril–Kamchatka Trench) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, கடல் மட்டத்தில் இருந்து பல கிலோமீட்டர் ஆழத்தில் பாறைகளுடன் ஒட்டிக்கொண்டிருந்த சிறிய கருப்பு நிற உருண்டைகளைக் கண்டனர். சுமார் 3 மில்லிமீட்டர் அளவுள்ள இவை பார்ப்பதற்குச் சிறிய கருப்பு முத்துக்கள் போல இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று சோதித்தபோது, அவை முட்டைகள் அல்ல, உண்மையில் 'கூடுகள்' (Cocoons) என்பது தெரியவந்தது. அந்த கூடுகளைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பால் போன்ற கருவுணவு (Yolk) மற்றும் தட்டைப்புழுக்களின் கருக்கள் (Flatworm embryos) இருந்தன. டி.என்.ஏ சோதனையில், இவை 'பிளாட்டிஹெல்மின்தெஸ்' (Platyhelminthes) என்ற தொகுதியைச் சேர்ந்த முற்றிலும் புதிய வகை இனம் என்பது உறுதி செய்யப்பட்டது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் கெய்ச்சி ககுய்-டோக்கியோ பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து, அதிநவீன 'ரிமோட்' மூலம் இயங்கும் வாகனத்தைப் (ROV) பயன்படுத்தி கடலின் இருண்ட ஆழமான 'ஹாடல் மண்டலத்தில்' (Hadal zone) இந்த ஆய்வை மேற்கொண்டனர். முட்டைகள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளன? இந்த முட்டைகள் கருப்பு நிறத்திலும், தோல் போன்ற கடினமான அமைப்பிலும் இருப்பதற்குப் பின்னால் முக்கிய காரணங்கள் உள்ளன. கடல் மட்டத்தை விட 600 மடங்கு அதிகமான அழுத்தத்தைத் தாங்கும் வகையில் இந்த நிறமிகளும், கடினமான தோலும் அமைந்துள்ளன. பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொள்ளவும், நுண்ணுயிரிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது. சூரிய ஒளி துளியும் படாத உறைபனி இருட்டில், கருக்கள் நிலையாக வளர இந்த நிறமிகள் உதவுகின்றன. கடலின் இவ்வளவு ஆழமான பகுதியில், அதீத அழுத்தத்திற்கு இடையே தட்டைப்புழு போன்ற சிறிய உயிரினங்கள் வாழ்வது மட்டுமல்லாமல், வெற்றிகரமாக இனப்பெருக்கமும் செய்கின்றன என்பது மிகப்பெரிய அறிவியல் மைல்கல் ஆகும். சில கடல்வாழ் உயிரினங்கள், ஆழ்கடலின் ஆழமான அகழிகளில் குடியேறுவதற்காக வியக்கத்தக்க பரிணாம மாற்றங்களை அடைந்துள்ளன என்பதை இந்த 'கருப்பு முட்டைகள்' நிரூபிக்கின்றன. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
ஒரு நிமிடத்தில் 12.28 மீட்டர் பயணம்... கார் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த நெதர்லாந்து கோல்ட் பிஷ்!
தொழில்நுட்பம்

ஒரு நிமிடத்தில் 12.28 மீட்டர் பயணம்... கார் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த நெதர்லாந்து கோல்ட் பிஷ்!

கோல்ட் பிஷ் என்றாலே தொட்டிக்குள் அமைதியாக நீந்தும் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால், 'பிளப்' (Blub) என்ற ஒரு தங்கமீன், மீன்களால் இயக்கப்படும் வாகனத்தில் அதிக தூரம் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியில் நடந்த 'லோ ஷோ டீ ரெக்கார்ட்' என்ற நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. பிளப் மீன், 1 நிமிடத்தில் (60 வினாடிகள்) சுமார் 12.28 மீட்டர் (40 அடி 3.46 அங்குலம்) தூரத்திற்கு தனது வாகனத்தைச் செலுத்தியது. கின்னஸ் சாதனைக்குத் தேவையான 5 மீட்டர் இலக்கை விட இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த கணினி பொறியாளர் தாமஸ் டி வுல்ஃப் என்பவருக்கு சொந்தமானது இந்த பிளப் மீன். தனது வழக்கமான பொறியியல் வேலைகளில் சலிப்பு ஏற்பட்டதால், பொழுதுபோக்கிற்காகவும் தொழில்நுட்ப ஆர்வத்திற்காகவும் இந்த விசித்திரமான காரைத் தாமஸ் உருவாக்கினார். மீன் எப்படி காரை ஓட்டியது? இந்த வாகனம் ரோபாட்டிக்ஸ், விலங்கு நடத்தை அறிவியலை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. 4 சக்கரங்கள் கொண்ட ஒரு அடித்தளத்தின் மேல், மீன் இருப்பதற்கான ஒரு வெளிப்படையான தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டது. தொட்டிக்குள் பிளப் நீந்துவதைக் கண்காணிக்க 'மோஷன் சென்சிங்' (Motion-sensing) கேமரா பொருத்தப்பட்டிருந்தது. மீன் தொட்டியின் எந்தப் பக்கமாக நீந்துகிறதோ, அதை உணர்ந்துகொள்ளும் சென்சார்கள் கீழே உள்ள சக்கரங்களுக்குக் கட்டளையிட்டு, காரை அதே திசையில் நகர்த்தின. இந்த சாதனை வெறும் வேடிக்கைக்காகச் செய்யப்பட்டதல்ல; நவீன ரோபாட்டிக்ஸ் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கத்தைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் உச்சத்தில் உள்ள இந்த நேரத்தில், ஒரு எளிய உயிரினத்தால் கூட சிக்கலான இயந்திரங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது. பொறியாளர் தாமஸ் பல மாதங்கள் செலவழித்து இந்த மென்பொருளை செம்மைப்படுத்தியுள்ளார். சாதாரண தங்கமீனை உலக சாதனையாளராக மாற்றிய இந்த விசித்திரமான கண்டுபிடிப்பு, தற்போது உலகெங்கிலும் உள்ள அறிவியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்