Vivo V80 Launch: விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Vivo V80 அறிமுகம் ஆக தயாராக உள்ளது. இதன் விவரங்கள் சில வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Vivo V80 Launch: விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Vivo V80 அறிமுகம் ஆக தயாராக உள்ளது. இதன் விவரங்கள் சில வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனைக்கு, நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என, கால்நடை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மரக்கட்டைகள் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கு 'லிக்னின்' (Lignin) என்ற ஒரு கடினமான கரிமப் பொருள்தான் காரணம். மரத்தின் எடையில் 25% வரை இருக்கும் இந்த லிக்னின், இதுவரை தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் அல்லது தூக்கி எறியப்படும் ஒரு கழிவாகவே இருந்து வந்தது. காரணம், இதைப் பிரித்து எடுப்பது அவ்வளவு எளிதல்ல. இதுவரை லிக்னினை உடைக்க அதிக வெப்பமும், ராட்சத அழுத்தமும், புதைபடிவ எரிபொருட்களும் தேவைப்பட்டன. ஆனால், தென் கொரிய விஞ்ஞானிகள் இப்போது ஒரு 'அறிவியல் மேஜிக்' செய்துள்ளனர். எந்த எரிபொருளும் இல்லாமல், வெறும் மின்சாரத்தைப் (Electricity) பயன்படுத்தி லிக்னினை உடைக்கும் வித்தையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் வெற்றிக்குக் காரணம் Pd/C எனும் ஒரு சிறப்பு வினையூக்கி. இது டபுள் ஏஜென்ட் போல செயல்படுகிறது. லிக்னினின் இரும்பு போன்ற பிணைப்புகளை அணுஅணுவாக உடைக்கிறது. உடைந்த துண்டுகளை பயனுள்ள எரிபொருட்களாகவும் (Cyclohexanol), வேதிப்பொருட்களாகவும் மாற்றுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால், இதற்குத் தேவையான ஹைட்ரஜனை வெளியிலிருந்து வாங்காமல், நீரிலிருந்து மின்சாரத்தின் மூலம் வினையூக்கியின் மேற்பரப்பிலேயே விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். மிகக் கடினமான பிணைப்புகளைக் கூட வெறும் 90 நிமிடங்களில் இந்தத் தொழில்நுட்பம் சிதைத்துவிட்டது. சில பிணைப்புகள் வெறும் 30°C (சாதாரண அறை வெப்பநிலை) அளவிலேயே முழுமையாக உடைந்தன. இந்தத் தொழில்நுட்பத்தைச் சுத்தமாக 5 முறை பயன்படுத்தினாலும் அதன் வீரியம் குறையவில்லை. வெறும் சோதனை குழாயோடு நிறுத்தாமல் பிர்ச் வகை மரக்கட்டைகளில் விஞ்ஞானிகள் இதனை சோதித்தனர். ஆரம்பத்தில் 5% மட்டுமே வெற்றி கிடைத்த நிலையில், சில மாற்றங்களுக்குப் பிறகு அது 19.6% ஆக உயர்ந்தது. அதாவது, மரக்கழிவுகளில் இருந்து 20% உயர்தர வேதிப்பொருட்களை இப்போது எடுக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பு வெறும் அறிவியல் மட்டுமல்ல; இது பொருளாதாரப் புரட்சி. பெட்ரோலியப் பொருட்களுக்குப் பதிலாக, மரக்கழிவுகளில் இருந்து தூய்மையான முறையில் எரிபொருட்களையும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் தயாரிக்க இது வழிவகுக்கும். குப்பையாகப் போன மரம், இனி மின்சாரத்தின் உதவியால் 'மலிவான மூலப்பொருளாக' மாறப்போகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில், 'கூகுள் பே (GPay) செயலியில் உள்ள இதய வடிவிலான கைகுலுக்கும் சின்னத்தைத் தொட்டால் வங்கிப் பணம் திருடப்படும்' எனப் பரவி வரும் ஆடியோ முற்றிலும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி Kumudam ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.