சத்தீஸ்கரில் காவல் துறையால் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஏற்றுகிறது...

சத்தீஸ்கரில் காவல் துறையால் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை பெரம்பூர் தொகுதியில் இருந்து ஆறாவது முறை தேர்தலில் தன் வேட்பாளரை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. அதில் சென்னை வடக்கு மாவட்ட செயலராக பணியாற்றிய ஆர்.டி.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளராக ஆர்.டி.சேகர் இருந்தாலும் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரம்பூர் தொகுதியில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட நினைக்கிறார். திமுக தலைவர் மா.கே.ஸ்டாலின் இவரை இப்பதவிக்கு தேர்வு செய்திருப்பது முக்கியமானது. ஏனெனில் சேகர் திமுக கொள்கைகளை எதிர்த்துப் பேசும் முறையில் இருந்து மாறி தொடர்ந்து திமுகவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இ இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசியல் பண்பு, ஒழுக்கம் மற்றும் ஆளுமை குறித்து மெகா ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ந்து பேசிய வீடியோவை, தி.மு.க தேர்தல் பிரசார விளம்பரமாக யூடியூப் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கனியைப் பறிக்க ஐந்து முனைப் போட்டிகள் நிலவி வரும் சூழலில், சமூக ஊடகப் பிரச்சாரத்தில் தி.மு.க ஒரு படி மேலே சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசியல் பண்பு, ஒழுக்கம் மற்றும் ஆளுமை குறித்து மெகா ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ந்து பேசிய வீடியோவை, தி.மு.க தேர்தல் பிரசார விளம்பரமாக யூடியூப் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியிட்டுள்ளது. த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் இந்த 'ரஜினி அஸ்திரம்' தேர்தல் களத்தில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, கோடை வெயிலைக் காட்டிலும் தேர்தல் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் த.வெ.க, ராமதாஸ் - சசிகலா கூட்டணி என போட்டி ஐந்து முனையாக அமைந்துள்ளது. சமூக ஊடகங்களின் காலத்தில், இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் களத்தில் எப்படி வியூகம் வகுத்து பிரசாரம் செய்கிறார்களோ அதே போல சமூக ஊடகக்களிலும் வாக்காளர்களைக் கவரும் வண்ணம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியைதை சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க பயன்படுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: “அரசனை ஏறுவதற்கு அவசரப்படாமல் கட்சியில் ஒரு தொண்டராக இளைஞரணி தலைவனா, ஒரு எம்.எல்.ஏ-வாக, ஒரு மேயராக, துணை முதலமைச்சராக பணியாற்றி அதற்கு பிறகு மக்களுடைய பேராதரவுடன் அரசனை ஏறியவர். மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணம் உண்டு என்பதற்கு அவருடைய சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறவர்கள், விமர்க்கிறவர்கள்கூட அவரை மதிக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், பா.ஜ.க-வைச் சேர்ந்த எச்.ராஜா, இவர் ஸ்டாலினை எப்படியெல்லாம் விமர்சித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும்கூட அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இதெல்லாம் ஒரு தலைவனுக்கான பண்பு, ஒரு கண்ணியமான குணங்கள் அவரிடம் இருக்கிறது. நட்புக்கு எப்போதுமே மரியாதைக் கொடுப்பவர். நண்பர்களை மிகவும் மதிக்கிறவர். எனக்கு அவரிடம் ரொம்ப பிடித்தது அவருடைய டிசிப்ளின், அதற்கு மேல் அவருடைய ஆட்டிடியூட், அது ரொம்ப முக்கியம். டிசிப்ளினை விட ஆட்டிடியூட் ரொம்ப முக்கியம். அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும்போது ரொம்ப முக்கியம். ஒரு வசீகரமான புன்னகைக்கு சொந்தக்காரர்.” என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி பேசிய வீடியோவை யூடியூப், ஓ.டி.டி தளங்களில் விளம்பரமாகவும் வெளியிட்டுள்ளனர். தி.மு.க-வின் இந்த பிரசார உத்தி ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. அண்மையில், த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது தி.மு.க மிரட்டியது என்றும் ஆனால் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று பேசினார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும் என்று கூறி வீடியோ வெளியிட்டார். இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி பேசிய வீடியோவை சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க பயன்படுத்தியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இந்த ஆண்டில் வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடும் இந்தியர்கள், வெறும் பட்ஜெட் மற்றும் காலநிலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசா நடைமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அப்படி இந்தியப் பயணிகளுக்கு ஏற்ற சிறந்த நாடுகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம். ஏப்ரல் 18 வரை டைம் இருக்கு: அபராதமும் இல்லை; தண்டனையும் இல்லை... சவூதி விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு பெரிய ரிலீஃப் ஜப்பான் பழமை மாறாத கலாச்சாரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் சங்கமமாக ஜப்பான் திகழ்கிறது. கோடைக்காலத் திருவிழாக்கள், கண்கவர் வாணவேடிக்கைகள் மற்றும் ஹொக்கைடோவின் இதமான காலநிலை பயணிகளை ஈர்க்கின்றன. முதன்முறையாக வெளிநாடு செல்பவர்களுக்கு இங்கிருக்கும் சிறப்பான போக்குவரத்து வசதி பெரும் உதவியாக இருக்கும். விசா விவரம்: சுற்றுலா விசா (இ-விசா வசதி உண்டு). கிடைக்கப் பெறும் காலம்: 5 முதல் 7 வேலை நாட்கள். கனடா இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், நவீன நகர வாழ்க்கையையும் ஒரே பயணத்தில் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு கனடா ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக பான்ஃப் (Banff) தேசியப் பூங்கா மற்றும் வான்கூவர் நகரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. தரம் மற்றும் பாதுகாப்பில் இது முன்னணியில் உள்ளது. விசா விவரம்: சுற்றுலா விசா (பயோமெட்ரிக்ஸ் அவசியம்). கால அளவு: 3 முதல் 6 வாரங்கள். நியூசிலாந்து பரபரப்பில்லாத தனிமையான சூழலை விரும்புபவர்களுக்கு நியூசிலாந்து மிகச்சிறந்த தேர்வு. நாம் கோடையை அனுபவிக்கும் போது, அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் மலைப்பாதையோர பயணங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். விசா விவரம்: ஆன்லைன் சுற்றுலா விசா. கால அளவு: 3 முதல் 5 வாரங்கள். போர்ச்சுகல் ஐரோப்பாவில் மக்கள் நெரிசல் குறைவான, அதே சமயம் கலாச்சாரம் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த இடத்தைத் தேடுபவர்களுக்கு போர்ச்சுகல் ஏற்றது. இங்குள்ள கட்டிடக்கலை மற்றும் கடற்கரைகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். விசா விவரம்: ஷெங்கன் (Schengen) விசா. கால அளவு: 15 நாட்கள் முதல் சீசனைப் பொறுத்து மாறுபடும் சிங்கப்பூர் சுத்தம் மற்றும் ஒழுங்கிற்குப் பெயர்பெற்ற சிங்கப்பூர், இந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமான சுற்றுலாத் தலமாகும். 'கார்டன்ஸ் பை தி பே' மற்றும் லிட்டில் இந்தியா போன்ற இடங்களை மிகக் குறுகிய கால அளவிலேயே சுற்றிப் பார்த்துவிடலாம். விசா விவரம்: சுற்றுலா இ-விசா. கால அளவு: 3 முதல் 5 வேலை நாட்கள். ஐஸ்லாந்து இயற்கையின் விந்தைகளை ரசிக்க விரும்புபவர்கள் ஐஸ்லாந்தைத் தேர்ந்தெடுக்கலாம். அங்கு நிலவும் 'நள்ளிரவு சூரியன்' (Midnight Sun), பிரம்மாண்ட நீர்வீழ்ச்சிகள் மற்றும் எரிமலைப் பாறைகள் ஒரு மாய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். விசா விவரம்: ஷெங்கன் விசா. கால அளவு: 15 நாட்கள், முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.