நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >தொகுதி மறுவரையறை: அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் கூடுதல் தொகுதிகள் - அமித்ஷா

தொகுதி மறுவரையறை: அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் கூடுதல் தொகுதிகள் - அமித்ஷா

வெள்ளி, ஏப்ரல் ௧௭, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|தினத்தந்தி|Dailythanthi
தொகுதி மறுவரையறை: அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் கூடுதல் தொகுதிகள் - அமித்ஷா

தொகுதி மறுவரையறை புதிய திட்டம்: அனைத்து மாநிலங்களுக்கும் 50% கூடுதல் மக்களவை தொகுதிகள், 543 இருந்து 850 ஆக உயர்வு; அமித்ஷா, தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உறுதி என விளக்கம். Delimitation Bill 2026: Amit Shah says all states to get 50% more Lok Sabha seats, total may rise from 543 to 850; assures fair representation, no loss for southern states and 33% reservation for women.

இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

Edappadi Palanisamy: ஸ்டாலினுக்கே சவால் விடும் சேலம்! – "தமிழ்நாட்டிற்கு அவர் சி.எம்... ஆனா சேலத்திற்கு நாங்கதான் கிங்!"
top

Edappadi Palanisamy: ஸ்டாலினுக்கே சவால் விடும் சேலம்! – "தமிழ்நாட்டிற்கு அவர் சி.எம்... ஆனா சேலத்திற்கு நாங்கதான் கிங்!"

தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதியளித்த பிறகும், தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து குறை கூறி வருவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: வீரபாண்டி தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இன்னும் 3 நாள்கள்தான் இருக்கிறது. அதனால்தான் வெயிலிலும் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. நம்முடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக இருக்கிறது. திமுக கூட்டணியில் ஒவ்வொரு நாளும் தலைவர்கள் ஒவ்வொரு மாதிரியாக பேசுகிறார்கள். தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு சட்டை போடத் தொடங்கி விட்டார்கள். பொதுமக்கள் கருப்பு சட்டை அடையாளத்தை நிச்சயம் கொடுப்பார்கள். யாரோ சொன்னதைக் கேட்டு எதுவுமே தெரியாமல் கருப்பு சட்டை போட்டிருக்கிறார். தொகுதி மறுவரையறையில் நம்முடைய தொகுதிகள் குறைந்து விடும் என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி இவ்வாறு செய்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார். தொகுதி மறுவரையறையில் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு ஏற்படாது என தெளிவாக சொல்லியபிறகும் குறை கூறி வருகிறார். பிரதமர் நாடாளுமன்றத்தில் தெளிவாக சொல்லிவிட்டார். எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் உறுதியளித்து விட்டார். தற்போது இருக்கும் 39 தொகுதிகள் 59 தொகுதியாக உயரும். நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவு படுத்திய பிறகும் கருப்பு சட்டையை கழற்றவில்லை. மத்திய அரசு அறிவித்தபிறகும், கருப்பு சட்டை போட்டுக் கொண்டு பேசுகிறார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற சொல்லியும் யாரும் ஏற்றவில்லை. மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள். தமிழக மக்கள் எண்ணிய படியே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்து விட்டது. கருப்பு சட்டைக்கு வேலையில்லாமல் போய்விட்டது. நான் கேட்பதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறார். டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் தேர்தல் என்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும். அவருக்கு மூளை கெட்டுப் போய்விட்டது. சாதாரண மக்களுக்கு தெரிவது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. இது தமிழ்நாட்டிற்கு நடைபெறும் தேர்தல் என தெளிவு படுத்தி வருகிறோம். கூட்டணி அமைத்தபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என தெளிவாக சொல்லி இருக்கிறார். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று சொல்லியபிறகும், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் பிரச்சினை என்று கூறி மக்களை திசை திருப்பி வருகிறார். சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருக்கலாம். ஆனால் சேலத்தை அதிமுகதான் ஆண்டு வருகிறது. சேலத்தின் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஜெயித்துள்ளோம். அதிமுகவின் எக்கு கோட்டையாக சேலம் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தலில் 11 தொகுதிகளிலும் ஜெயிப்போம். தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழ்நாட்டு மக்களை மீட்க நடக்கும் தேர்தல் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை அதிமுக ஆட்சி அமைக்காவிட்டால், ஸ்டாலின் குடும்பம் சர்வாதிகார குடும்பமாக மாறிவிடும். அதிமுக மக்களுக்காக உழைக்கும் கட்சி. திமுக குடும்பத்திற்காக உழைக்கும் கட்சி. திமுக கட்சியல்ல. கார்பரேட் கம்பெனி. முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாக கொண்ட கம்பெனியாக திமுக உள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கி ரூ.24 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
top

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!

வால்பாறையில் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
வால்பாறை: சுற்றுலா வேன் கவிழ்ந்து கொடூர விபத்து – 7 பேர் உயிரிழந்த சோகம்!
top

வால்பாறை: சுற்றுலா வேன் கவிழ்ந்து கொடூர விபத்து – 7 பேர் உயிரிழந்த சோகம்!

13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், கவிழ்ந்து விழுந்தது. மேலும் மலைச்சரிவில் உருண்ட அந்த வேன், நேராக 10வது கொண்டை ஊசி வளைவு சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்