களம் இறங்கும் வேட்பாளர்கள் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் இதனையடுத்து நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 2500க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அதன் பிறகு வேட்புமனுவை திரும்பப் பெற முடியாது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் இதனையடுத்து தேர்தல் சின்னங்களை ஒதுக்கும் பணியானது தொடங்கும். அந்த வகையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்குவார். சில அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் குறிப்பிட்ட சின்னங்களை பெற்றிருந்தால், அந்த சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதிப்பார். மொத்தம் 184 பொதுச் சின்னங்களை தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ளது . யாருக்கு எந்த சின்னம்.? ஆனால் ஒரே பொதுச் சின்னத்தை வேறு கட்சிகள் கேட்டிருந்தால், அது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும். இதற்காக ஒரு சீட்டில் வேட்பாளரின் பெயர், வரிசை எண் ஆகியவற்றை எழுதி குலுக்கி போட்டி சீட் எடுக்கப்படும். அப்போது யார் பெயருக்கு சீட்டு விழுகிறதோ அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். அந்த சின்னம் கிடைக்காத வேட்பாளர்களுக்கு வேறு சின்னம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட 3 சின்னங்களுமே கிடைக்கவில்லை என்றால் அந்த வேட்பாளருக்கான சின்னத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியே தேர்வு செய்வார்.
மொத்த வேட்பாளர்கள் எத்தனை பேர்.? யாருக்கு எந்த சின்னம்.? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு



