ஊட்டி: ஊட்டி அருகே, கையாடல் செய்யப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும் என, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஊட்டி: ஊட்டி அருகே, கையாடல் செய்யப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும் என, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
MK Stalin: திமுகவில் யாரும் தொடர்ந்து 2 முறை முதலமைச்சர் ஆனது இல்லையாம். சென்ற முறை நீங்கள் சொன்னதை உடைத்து, நான் முதலமைச்சர் ஆனேன். 2–வது முறை இல்லை என்று சொல்கிறார்களே? அதையும் உடைக்கிறேன் பாருங்கள் என தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தச் செய்தி Times Now News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஏப்ரல் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) நம் அனைவருக்கும் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒரு தினம். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். காபந்து அரசு நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறது. சென்னைக்கு புது காவல் ஆணையர்: தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாய்குமார் பணியமர்த்தப்பட்ட நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையரையும் பணியிடம் மாற்றம் செய்துள்து தேர்தல் ஆணையம். அந்த பதவியில் இருந்த அருணை பணியிடம் மாற்றம் செய்து அவருக்கு பதிலாக அபின் தினேஷ் மோடக்கை நியமனம் செய்துள்ளது. யார் இவர்? தலைவர்கள் பரப்புரைக்கு போதிய அனுமதி தரவில்லை என்று அருண் ஐபிஎஸ் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்த நிலையில், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இவர் 1997ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் இதற்கு முன்பு மாநில குற்ற ஆவணங்கள் பிரிவு ஏடிஜிபி-யாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி-யாகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவர் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி-யாக பொறுப்பு வகித்தபோது பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார குற்ற வழக்குகளை கையாண்டுள்ளார். அதில் சர்வதேச நிதி சேவை ஊழல் வழக்கு மிகவும் முக்கியமானது ஆகும். மேலும், தாம்பரம் காவல் ஆணையராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தாம்பரத்தில் 3வது காவல் ஆணையர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். என்ஐஏ அனுபவம்: இதைவிட முக்கியமாக இவர் என்ஐஏ-வில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பாருச் ஆர்எஸ்எஸ் இரட்டைக் கொலை, ஐஎஸ்ஐஎஸ் மும்பை வழக்கு, பெங்களூரில் சர்ச் தெரு குண்டுவெடிப்பு என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்துள்ளார். இவரது சிறப்பான பணிக்காக இவர் சிறந்த சேவைக்கான காவலர் பதக்கத்தையும் வென்றுள்ளார். தமிழ்நாட்டில் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியிலும் அவர் திறம்பட செயலாற்றிய அனுபவம் கொண்டவர். கடைசியாக அவர் அமலாக்கத்துறை சிஐடி பிரிவின் ஏடிஜிபி-யாக பொறுப்பு வகித்தார். தற்போது, சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணி: சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அபின் தினேஷ் மோடக்கிற்கு தேர்தல் தருணம் என்பதால் பணி சுமை அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனாலும், ஏராளமான அனுபவம் கொண்ட அபின் தினேஷ் மோடக் இதை திறம்பட கையாள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது பூர்வீகம் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த நாக்பூர் ஆகும். இவர் மெளண்ட் கார்மெல் பள்ளி மற்றும் சோமல்வார் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். விஎன்ஐடி நாக்பூரில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றவர். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.