கர படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு ?
|16 மணி நேரம் முன்|ராகேஷ் தாரா|Abp News
தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. கர படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் தனுஷின் சம்பளம் குறித்த விபரங்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி கரன் திரைப்படம் ரூ100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது போர் தொழில் படத்தின் மூலம் கவனமீர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா தனுஷின் கர படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக இசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். மமிதா பைஜூ ,சூரஜ் வெஞ்சரமூடு , கே.எஸ் ரவிகுமார் , கருணாஸ் , ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 1990 களில் அமெரிக்கா ஈராக் போர்ச் சூழல் காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் வரை எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுகிறது. திருடும் தொழிலை விட்டு கல்ஃபில் வேலைப் பார்த்த தனுஷ் இந்த போரின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பும் கட்டாயம் ஏற்படுகிறது. கடனில் இருக்கும் தனது நிலத்தை மீட்க மீண்டும் தனுஷ் அதே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் என்பதாக கர படத்தின் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தமான மாஸ் ஆக்ஷன் படமாக இல்லாம. எமோஷ்னலான த்ரில்லர் திரைப்படமாக கர படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம் கர படத்தில் தனுஷின் சம்பளம் கர திரைப்படம் சுமார் ரூ100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க தனுஷ் ரூ58 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்தில் நடிக்க சராசரியாக தனுஷ் 15 முதல் 20 கோடி வரை சம்பளமாக பெற்றுவந்தார். சமீப காலங்களில் நடிகர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தை உயர்த்தி வரும் நிலையில் தனுஷ் சராசரியாக ஒரு படத்தில் நடிக்க 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் நாயகியாக நடித்த மெஹ்ரின் பிர்சாதாவுக்குத் திருமணம் நடைபெற்றது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டு முதல் எப்போதும் குளறும் பட்டது. இந்த ஆண்டும் ஏப்ரல் 30 ஆம் நாள் சித்திரை தேரோட்டம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் காரணமாக அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
இந்த தேரோட்டத்தை முதன்மையாக கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலின் பூசாரிகள் நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த பூசாரிகள் தேரோட்டம் நேரங்களை வடிவமைத்துள்ளனர். பிரமாண்டமான தேரோட்டம் நடைபெறும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேரோட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த கோயிலின
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்... | Actor Suriya's Karuppu Audio Launch
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.