நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >MK Stalin: “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு
🎬 சினிமா

MK Stalin: “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு

வியாழன், ஏப்ரல் ௧௬, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|ஸ்ரீராம் ஆராவமுதன்|Abp News
MK Stalin: “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை(Delimitation) எதிர்த்து, இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம். முதலமைச்சரின் பதிவு என்ன.? தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் முன்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் போராட்டம் நடத்தினார். இதனிடையே, தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும், பாஜகவின் ஆணவம் அழியட்டும் எனக் கூறி, ஒரு முக்கியமான பதிவை போட்டுள்ளார். #Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும் ! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும்... pic.twitter.com/aSsOLN7K6J — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026 முன்னதாக, தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தங்களது வரம்பை தாண்டி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை பாஜக அரசு வஞ்சிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், இப்போது கொண்டுவரும் சட்டத் திருத்தத்தால், பெயரளவிற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிகவும் கூடுதலாக தொகுதிகளை அதிகரிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். “கருப்புக்கொடி போராட்டம்“ அதைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தில் உள்ள திமுக நிர்வாகியின் இல்லத்தின் முன்பு கருப்புகொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரிர்த்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அப்போது, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது என முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷமிட்டனர். இன்று நாடாளுமன்ற கூட்டம் இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!
சினிமா

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது பற்றி... | Parliament's Special Session Has Begun! இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
4ஆம் ஆண்டில் சூடான் போர்.. பஞ்சம், பசி என மொத்தம் 59,000 பேர் மரணம்!
சினிமா

4ஆம் ஆண்டில் சூடான் போர்.. பஞ்சம், பசி என மொத்தம் 59,000 பேர் மரணம்!

Sudan War Hits Year 4 — Famine Deepens, Millions Displaced/ 4ஆம் ஆண்டில் சூடான் போர்.. பஞ்சம், பசி என மொத்தம் 59,000 பேர் மரணம்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
தையிட்டி விகாரையை நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
சினிமா

தையிட்டி விகாரையை நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரையை நிலைநிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (15) யாழ். தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. தையிட்டி நில உரிமையாளர்களின் ஏற்பாட்டில் ந... இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்