நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு; கலெக்டருக்கு முக்கிய பொறுப்பு – மே மாதத்திற்குள் முடிக்க கெடு
🏏 விளையாட்டு

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு; கலெக்டருக்கு முக்கிய பொறுப்பு – மே மாதத்திற்குள் முடிக்க கெடு

வியாழன், ஏப்ரல் ௯, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|balaji e|The Indian Express
திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு; கலெக்டருக்கு முக்கிய பொறுப்பு – மே மாதத்திற்குள் முடிக்க கெடு

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, இம்மலையை முழுமையாக அளவீடு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரை இந்த வழக்கில் கூடுதல் எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து வருவாய்த் துறையினர் வரும் மே மாதத்திற்குள் அளவீட்டுப் பணிகளை முடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு மனுவில், திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, “திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்த பிறகே அதை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். மத்திய தொல்லியல் துறை அளவீடு செய்ய தயாராக உள்ளது. ஆனால் வருவாய் துறையினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், முக்கிய உத்தரவை பிறப்பித்தனர். அதன்படி, இந்த வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டரை கூடுதல் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், கலெக்டர் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும் என்றும், இதற்காக வருவாய் துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினர். இந்த முழு நடவடிக்கையும் அடுத்த மாதமான மே மாதத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு
விளையாட்டு

கால்நடைகள் பாதுகாப்பு டாக்டர்கள் அறிவுரை

உடுமலை: கால்நடைகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என, கால்நடை டாக்டர்கள் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
சர்வதேச டி20-யில் 9 விக்கெட்... சாதனை படைத்த பிரேசில் வீராங்கனை
விளையாட்டு

சர்வதேச டி20-யில் 9 விக்கெட்... சாதனை படைத்த பிரேசில் வீராங்கனை

இன்று நடைபெற்ற லெசோதோ மகளிர் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகசாதனை படைத்தார் பிரேசில் வீராங்கனை லாரா கார்டோசோ. 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லெசோதோ அணி வெறும் 13 ரன்களுக்கு ஆல்அவுட்டானது; ஒரே டி20 போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலராக மாறி லாரா கார்டோசோ சாதனை இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
IPL 2026 : டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்திய ஐபிஎல் விதி – 1 ரன் வித்தியாசத்தில் தோல்விக்கு காரணம்?
விளையாட்டு

IPL 2026 : டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்திய ஐபிஎல் விதி – 1 ரன் வித்தியாசத்தில் தோல்விக்கு காரணம்?

IPL Rule Controversy : ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டியில் ஒரு விசித்திரமான ஐபிஎல் விதியின் காரணமாக குஜராத் டைட்ன்ஸ்க்கு தோல்வி அடைய நேரிட்டது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்