நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!
💻 தொழில்நுட்பம்

AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|karthi k|Tamil News 18
AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!

ரிமோட் இல்லாமல் அல்லது ரிமோட் தொலைந்துவிட்டால் உங்கள் வீட்டு ஏசியை எப்படி ஆன் செய்யலாம் என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Tamil News 18 இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

1,900° செல்சியஸ் வெப்பம், லாவா பந்து... ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த விசித்தர கோள்!
தொழில்நுட்பம்

1,900° செல்சியஸ் வெப்பம், லாவா பந்து... ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த விசித்தர கோள்!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நம்பி வந்த அடிப்படை விதியை, TOI-561 b என்ற விசித்திரமான கோள் சுக்குநூறாக உடைத்தெறிந்து உள்ளது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள தரவுகள், ஒட்டுமொத்த அறிவியல் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக, ஒரு நட்சத்திரத்திற்கு மிக மிக அருகில் இருக்கும் சிறிய பாறைக்கோள்கள், அந்த நட்சத்திரத்தின் கடும் வெப்பத்தால் தனது வளிமண்டலத்தை இழந்து வெறும் மொட்டைப் பாறையாகவே இருக்கும் என்பதுதான் இதுவரை இருந்த கணக்கு. ஆனால், TOI-561 b அந்த கணக்கை தப்பு என்று நிரூபித்துள்ளது. இந்த கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 10 மணி நேரத்தில் சுற்றி முடித்துவிடுகிறது. (நமது பூமியில் ஒருநாள் முடிவதற்குள் அங்கே 2 வருடங்கள் முடிந்துவிடும்.) நமது சூரியனை விட 2 மடங்கு அதிக வயது கொண்ட நட்சத்திரத்தை இது சுற்றி வருகிறது. இந்தக் கோளைப் பற்றி ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் இன்னும் சுவாரசியமானவை. இது வெறும் பாறையாக இருந்திருந்தால் அதன் வெப்ப நிலை 2,700 டிகிரி செல்சியஸாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஜேம்ஸ் வெப் அளவிட்ட போது அது 1,800 டிகிரியாக மட்டுமே இருந்தது. இந்த 1,000 டிகிரி குறைவிற்குக் காரணம், அங்கே இருக்கும் தடிமனான வளிமண்டலம் தான். இந்தக் கோளின் உட்புறம் உருகிய குழம்பாக (Magma) உள்ளது. இதிலிருந்து வாயுக்கள் வெளியேறி வளிமண்டலத்தை நிரப்புகின்றன, அதே சமயம் வளிமண்டல வாயுக்களை அடியில் உள்ள மேக்மா மீண்டும் உறிஞ்சிக் கொள்கிறது. இந்த ஒரு 'ரீசைக்கிள்' முறையால்தான் வளிமண்டலம் அழியாமல் நீடிக்கிறது. அங்கே சிலிக்கேட் துகள்களால் ஆன பிரகாசமான மேகங்கள் இருக்கலாம், அவை நட்சத்திர ஒளியைப் பிரதிபலித்துக் கோளைக் குளிர்விக்க உதவுகின்றன. இவ்வளவு சிறிய மற்றும் வெப்பமான ஒரு கோள் இவ்வளவு காலம் வளிமண்டலத்தைத் தக்கவைத்திருப்பது சாத்தியமே இல்லை என்றுதான் நாங்கள் கணித்திருந்தோம் என்கிறார் ஆய்வாளர் நிகோல் வாலக். இதுவரை விண்வெளியில் வளிமண்டலம் உள்ள கோள்களையும், இல்லாத கோள்களையும் பிரிக்கப் பயன்படுத்தப்பட்ட 'காஸ்மிக் ஷோர்லைன்' (Cosmic Shoreline) என்ற எல்லையையே இந்தக் கண்டுபிடிப்பு இப்போது கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சுமார் 37 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்து இந்தத் தரவுகளை வழங்கியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்கள் பிரபஞ்சத்தின் மூலைகளில் ஒளிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்த 'ஈரமான லாவா பந்து' ஒரு மிகச்சிறந்த உதாரணம். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!
தொழில்நுட்பம்

ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (Fintech) நிறுவனமான கிரெட் (CRED) தனது பயனர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் புரட்சிகரமான புதியவசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி யு.பி.ஐ மூலம் பணம் அனுப்பும் போது 4 அல்லது 6 இலக்க பின் நம்பரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை; உங்க ஸ்மார்ட்போனில் உள்ள பயோமெட்ரிக் (Biometric) வசதிகளைக் கொண்டே நொடியில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையில், பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள பிங்கர் பிரிண்ட் (Fingerprint) பேஸ் அன்லாக் (Face Unlock) வசதியை பயன்படுத்தி பாதுகாப்பாக பணத்தை அனுப்பலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்பை விட வேகமாகவும், எளிமையாகவும் மாற்றுகிறது. பொது இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, மற்றவர்கள் உங்க பின் நம்பரை பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இனி தேவையில்லை. அவசரத்தில் தவறான பின் நம்பரை உள்ளிடுவதால் பரிவர்த்தனை தோல்வி அடைவதைத் தடுத்து, தடையற்ற சேவையை இது உறுதி செய்கிறது. கிரெட் செயலியின் கீழ் வரும் அனைத்து முக்கிய சேவைகளுக்கும் இந்த பயோமெட்ரிக் முறை பொருந்தும். கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் (Utility Bills), கடைகளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் (Scan & Pay), தனிநபர்களுக்குப் பணம் அனுப்புதல், வங்கி இருப்புச் சரிபார்த்தல் (Balance Check). தற்போதைய முதற்கட்டமாக, ரூ. 5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்த முடியும். இது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆகிய இரு இயங்குதளங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்க மொபைலில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு சென்சார்கள் மூலமே இது செயல்படுவதால் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்த என்.பி.சி.ஐ எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கிரெட் நிறுவனத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள கிரெட், இந்த மாற்றத்தின் மூலம் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் உலகில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
வெறும் 3 செ.மீ. மட்டுமே நீளம்... முதுகில் முட்டைகளைச் சுமக்கும் விசித்திரத் தவளை கண்டுபிடிப்பு!
தொழில்நுட்பம்

வெறும் 3 செ.மீ. மட்டுமே நீளம்... முதுகில் முட்டைகளைச் சுமக்கும் விசித்திரத் தவளை கண்டுபிடிப்பு!

தன் முதுகில் முட்டைகளை சுமந்து செல்லும் தவளையை நீங்க பார்த்ததுண்டா? தென் அமெரிக்க நாடான பெருவின் அமேசான் காடுகளில், முதுகில் 'பரிணாமப் பை' (Natural Pouch) கொண்ட புதிய வகை சிறிய தவளை இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக கங்காரு போன்ற விலங்குகள் குட்டிகளைச் சுமக்க பைகளை வைத்திருப்பதை 'மார்சுபியல்' என்பார்கள். அதே போன்ற ஒரு இனத்தைச் சேர்ந்த இந்தத் தவளைக்கு 'கேஸ்ட்ரோதேகா மிட்டாலிட்டி' (Gastrotheca mittaliiti) என்று பெயரிடப்பட்டுள்ளது. பச்சை நிறம் கொண்ட இந்த தவளைகள், வெறும் 2.7 முதல் 3.3 செ.மீ. நீளம் மட்டுமே கொண்டவை. இது இந்தத் தவளைக் குடும்பத்திலேயே மிகச் சிறிய இனங்களில் ஒன்றாகும். பெண் தவளைகள் தங்கள் முதுகில் உள்ள சிறப்புப் பையில் முட்டைகளைச் சுமக்கின்றன. அந்தப் பையிலேயே முட்டைகள் வளர்ந்து, முழுமையான தவளைக் குட்டிகளாக (Froglets) மாறிய பிறகு வெளியே வருகின்றன. நியூசிலாந்தைச் சேர்ந்த 'ஜூடாக்சா' (Zootaxa) என்ற அறிவியல் இதழில் இந்தக் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் செவில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, பெருவின் அமேசானஸ் பிராந்தியத்தில் உள்ள ஈரப்பதமான மேகக் காடுகளில் (Cloud Forests) இந்தத் தவளையைக் கண்டறிந்தனர். சாதாரணத் தவளைகள் குளம் அல்லது குட்டைகளில் முட்டையிடும். ஆனால், இந்தப் புதிய இனம் தன் முதுகிலேயே முட்டைகளைச் சுமக்கிறது. உயரமான மலைப்பகுதிகளில் உள்ள மேகக் காடுகளில் நீர்நிலைகள் குறைவாக இருக்கலாம். எனவே, முட்டைகள் பாதுகாப்பாக வளர இத்தகைய பரிணாம வளர்ச்சியை இவை பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த மகிழ்ச்சியான கண்டுபிடிப்புக்கு மத்தியிலும், விஞ்ஞானிகள் ஒரு கவலையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். புவி வெப்பமடைதல் மற்றும் காடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால் இந்தத் தவளைகளின் வசிப்பிடம் வேகமாக அழிந்து வருகிறது. விவசாயிகள் காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றுவதும் இந்த இனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அமேசான் காடுகளின் வியக்கத்தக்க பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு இந்தத் தவளை ஒரு சான்றாகும். புதிய உயிரினங்கள் கண்டறியப்படும் வேகத்தை விட அவை அழியும் வேகம் அதிகமாக இருப்பதால், இத்தகைய சூழல் மண்டலங்களைப் பாதுகாக்க வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்